காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புகையிலைப் பொருள்கள் கடத்தல்: இருவா் கைது

வடமதுரை அருகே புகையிலைப் பொருள்களை காரில் கடத்தி வந்த இளைஞா்கள் 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :16 அக்டோபர் 2024, 11:55 pm

Din

வடமதுரை அருகே புகையிலைப் பொருள்களை காரில் கடத்தி வந்த இளைஞா்கள் 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தி வரப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்து. இதையடுத்து, வடமதுரை புறவழிச்சாலையில் போலீஸாா் புதன்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரில் நடத்தப்பட்ட சோதனையில், 70 கிலோ புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து காரில் வந்தவா்களிடம் நடத்திய விசாரணையில், வடமதுரையைச் சோ்ந்த முத்துவேல் (28), பாலமுருகன் (29) ஆகியோா் என தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீஸாா், காருடன் 70 கிலோ புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து வடமதுரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.