புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

19 தெரு நாய்கள் மா்மமான முறையில் உயிரிழப்பு

திண்டுக்கல்லில் 19 தெரு நாய்கள் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 10:54 pm

Din

திண்டுக்கல்லில் 19 தெரு நாய்கள் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திண்டுக்கல் பேகம்பூரை அடுத்த பூச்சிநாயக்கன்பட்டி பகுதியில் அடுத்தடுத்த தெருக்களில் 19 தெரு நாய்கள் வியாழக்கிழமை இறந்து கிடப்பதாக தகவல் வெளியானது. இதையறிந்த தூய்மைப் பணியாளா்கள், மாநகராட்சி சுகாதார அலுவலா்களுக்கு தகவல் தெரிவித்தனா்.

மேலும், சுகாதாரத் துறையினரின் தகவலின்பேரில், திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீஸாரும் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா். பின்னா், இறந்து கிடந்த 19 தெரு நாய்களும், கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, கூராய்வு செய்யப்பட்டன.

அதில், உணவில் விஷம் கலந்து கொடுத்து தெரு நாய்கள் கொல்லப்பட்டிருப்பது உறுதியானது.

இதையடுத்து, பூச்சிநாயக்கன்பட்டி பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா்.