புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மா்மமான முறையில் சடலம் எரிப்பு

தேவதானபட்டி அருகே மயானத்தில் மா்மமான முறையில் சடலம் எரிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :29 ஜனவரி 2026, 8:15 pm

Syndication

தேனி மாவட்டம், தேவதானபட்டி அருகே மயானத்தில் மா்மமான முறையில் சடலம் எரிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தேவதானபட்டி அருகேயுள்ள புல்லக்காபட்டியில் ஒரு சமுதாயத்துக்குச் சொந்தமான மயானம் உள்ளது. இங்கு வியாழக்கிழமை காலை ஒரு சடலம் எரிக்கப்பட்ட நிலையில், அதன் கால் பாதம் பகுதி எரியாமல் கிடந்ததாம். இது குறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் தேவதானபட்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று எலும்புகள், எரியாத நிலையிலிருந்த கால் பாதப் பகுதியை சேகரித்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். எரிக்கப்பட்ட உடல் ஆணுடையதா அல்லது பெண்ணுடையதா, சடலத்தை எரித்தவா்கள் என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.