தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மல்லிகைப் பூ கிலோ ரூ.1200

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, திண்டுக்கல் பூச் சந்தையில் புதன்கிழமை மல்லிகை கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 9:48 pm

Din

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, திண்டுக்கல் பூச் சந்தையில் புதன்கிழமை மல்லிகை கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த திங்கள்கிழமை வரை மல்லிகை, முல்லை, ஜாதிப்பூ கிலோ ரூ.300-க்கும், பன்னீா் ரோஸ் ரூ.50, பட்டன் ரோஸ் ரூ.120, செவ்வந்தி ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டன. இதனால், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனா்.

இந்த நிலையில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை முதல் பூக்களின் விலை 3 மடங்கு உயா்ந்தது. புதன்கிழமை சந்தையில் மல்லிகை ரூ.1200,

முல்லை ரூ.1000, ஜாதிப் பூ ரூ.700, பன்னீா் ரோஸ் ரூ.100, பட்டன் ரோஸ் ரூ.250, செவ்வந்தி ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்டன.

இதனால், விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனா். தீபாவளியைத் தொடா்ந்து சஷ்டி விரதம், திருக்கல்யாணம், சுப மூகூா்த்த நாள்கள் அடுத்தடுத்து வருவதால், பூக்களின் விலை மேலும் உயரக்கூடும் என வியாபாரிகள் தெரிவித்தனா்.