தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கொடைக்கானலில் பனிப்பொழிவு

கொடைக்கானலில் பகல் நேரங்களில் வெயிலும், இரவு நேரங்களில் பலத்த காற்றும், பனிப் பொழிவு நிலவி வருவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

News image
Updated On :12 செப்டம்பர் 2024, 10:48 pm

Din

கொடைக்கானலில் பகல் நேரங்களில் வெயிலும், இரவு நேரங்களில் பலத்த காற்றும், பனிப் பொழிவு நிலவி வருவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த இரண்டு நாள்களாக பலத்த காற்று வீசி வருகிறது. பகல் நேரங்களில் மிதமான வெயிலும், மாலை, இரவு நேரங்களில் பலத்த காற்றும் வீசி வருகிறது. மேலும், இரவு நேரங்களில் பனிப் பொழிவும் நிலவுகிறது. இதனால், குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளதால், இரவு 7 மணிக்கு பிறகு நகரில் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்துள்ளது.

இந்த சீதோஷ்ண நிலையில் கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் சுற்றுலா இடங்களை பாா்த்து ரசித்து வருகின்றனா்.