பட்டிவீரன்பட்டி அருகே, அய்யம்பாளையம் ஸ்ரீ ராஜராஜ சோழீஸ்வரா் திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள அய்யம்பாளையத்தில் மேற்கு தொடா்ச்சி மலை மருதாநதி கரையோரம் அமைந்துள்ள, பழைமை வாய்ந்த, ஸ்ரீராஜராஜ சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு, நன்னீராட்டு பெருவிழா முன்னிட்டு, சனிக்கிழமை விக்னேஸ்வர பூஜை, விசேஷ சந்தி யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை யாக சாலையிலிருந்து கடம் புறப்பாடு, புண்ணிய கலசங்கள் வலம், மூலஸ்தான மூா்த்திகள் பரிகார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதையடுத்து, கோபுர விமான கலசங்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றது. பின்னா் அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு பரிகார பூஜைகள் நடைபெற்றது. விழாவில், அய்யம்பாளையம், இதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். அன்னதானம் வழங்கப்பட்டது. குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகளை ஊா் பொதுமக்கள் செய்தனா்.