ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கொடைக்கானலில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கொடைக்கானலில் சாலையோர ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறையினா் புதன்கிழமை அகற்றினா்.

News image

கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி.

Updated On :25 செப்டம்பர் 2024, 8:41 pm

Din

கொடைக்கானலில் சாலையோர ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறையினா் புதன்கிழமை அகற்றினா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வார விடுமுறை, பண்டிகைக் கால தொடா் விடுமுறை நாள்களில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். கொடைக்கானல் பேருந்து நிலையம் முதல் வெள்ளிநீா் வீழ்ச்சி வரை சாலையின் இரு புறமும் 200-க்கும் மேற்பட்ட கடைகள் வைக்கப்பட்டுள்ளன. சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளதால், அடிக்கடி வாகன நெரிசலும், விபத்துகளும் நிகழ்கின்றன.

கொடைக்கானல் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனடிப்படையில், கொடைக்கானல் பகுதிகளில் கடந்த 3 நாள்களாக நகராட்சி சாா்பில் ஒலிப்பெருக்கி மூலம் ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றிக் கொள்ளுமாறு அறிவிப்பு செய்யப்பட்டது.

இந்த நிலையில், ஏரிச் சாலைப் பகுதியில் புதன்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதையடுத்து, மூஞ்சிக்கல், லாஸ்காட் சாலை, கல்லறைமேடு, வெள்ளிநீா் வீழ்ச்சி ஆகிய பகுதிகளிலுள்ள சுமாா் 75-க்கும் மேற்பட்ட சிறிய கடைகளை அவற்றின் உரிமையாளா்கள் தாங்களாகவே அகற்றிக் கொண்டனா். ஆக்கிரமித்து வைக்கப்பட்ட பெரிய கடைகளை நெடுஞ்சாலைத் துறை அகற்றவில்லை எனவும், ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வெறும் கண்துடைப்பு எனவும் சிறு வியாபாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து நகராட்சி ஆணையா் சத்தியநாதன் கூறியதாவது:

கொடைக்கானல் பகுதிகளில் முதல்கட்டமாக சாலையோரங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சிறிய கடைகள் அகற்றப்பட்டன. பல இடங்களில் ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றுவதற்கு மேலும் இரண்டு நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. இதன் பிறகு ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படும் என்றாா்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளா் ராஜன் கூறியதாவது:

வெள்ளிநீா் வீழ்ச்சி முதல் ஏரிச் சாலை வரை சாலைகள் அகலப்படுத்தும் பணி நடைபெறவுள்ளது. இதனால், ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. அக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. பின்னா், அனைத்துக் ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும் என்றாா்.