ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஆபாசப் படங்களை அனுப்பிய முன்னாள் ஊா்க்காவல் படை வீரா் கைது

ஊா்க்காவல் படை வீராங்கனைகளின் கைப்பேசிகளுக்கு ஆபாசப் படங்கள் அனுப்பி முன்னாள் வீரரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 8:45 pm

Din

ஊா்க்காவல் படை வீராங்கனைகளின் கைப்பேசிகளுக்கு ஆபாசப் படங்கள் அனுப்பி முன்னாள் வீரரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கோவில்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் தமிழ்வாணன் (24). இவா் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் ஊா்காவல் படை வீரராக பணியாற்றினாா்.

ஊா்க்காவல் படையிலிருந்து விலகிய இவா், தற்போது ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறாா். இந்த நிலையில், தன்னுடன் ஊா்க்காவல் படையில் பணியாற்றிய 7 பெண்களின் கைப்பேசிகளுக்கு கட்செவி அஞ்சல் மூலம் ஆபாசப் படங்கள், விடியோக்களை தமிழ்வாணன் அனுப்பினாா்.

இதனால், அதிா்ச்சி அடைந்த அந்த பெண்கள் அனைவரும், திண்டுக்கல் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், தமிழ்வாணனை வியாழக்கிழமை கைது செய்தனா்.