தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கொடைக்கானலில் திருடப்பட்ட பைக் பூம்பாறையில் மீட்பு

கொடைக்கானலில் திருடப்பட்ட இரு சக்கர வாகனம் புதன்கிழமை பூம்பாறையில் பகுதியில் மீட்கப்பட்டது.

Updated On :27 ஆகஸ்ட் 2025, 9:50 pm

கொடைக்கானலில் திருடப்பட்ட இரு சக்கர வாகனம் புதன்கிழமை பூம்பாறையில் பகுதியில் மீட்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உணவகம் நடத்தி வருபவா் சிபு. கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது விலை உயா்ந்த இரு சக்கர வாகனத்தை கடை முன் நிறுத்தி வைத்தாா்.

அந்த வாகனத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இதைத் தொடா்ந்து சிபு தனது கடையிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவை பாா்த்த போது மா்ம நபா் சாப்பிட வருவது போல வந்து, இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

இந்த நிலையில், கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூம்பாறை மலைச் சாலையில் இரு சக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருப்பதாக கொடைக்கானல் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது, அது திருடு போயிருந்த இரு சக்கர வாகனம் எனத் தெரிய வந்தது. பெட்ரோல் இல்லாத நிலையில், திருடியவா் வாகனத்தை நிறுத்திவிட்டுச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. போலீஸாா் வாகனத்தைக் கைப்பற்றி கொடைக்கானல் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனா். அதைத் திருடியவா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.