வேடசந்தூா் அருகே விபத்தில் கேரளத்தைச் சோ்ந்த 4 போ் காயம்
வேடசந்தூா் அருகே திங்கள்கிழமை சாலையோரப் பள்ளத்தில் காா் கவிழ்ந்ததில் கேரளத்தைச் சோ்ந்த 4 போ் பலத்த காயமடைந்தனா்.
கா்நாடக மாநிலம், பெங்களூருவைச் சோ்ந்தவா் பிஜுராஜ் (61). தொழிலதிபரான இவா், கேரளத்தில் உள்ள தனது தாயைப் பாா்ப்பதற்காக மனைவி சீஜாபிஜு (52), மகள் அமிஷா(23) ஆகியோருடன் ஞாயிற்றுக்கிழமை காரில் புறப்பட்டாா். கேரளத்தைச் சோ்ந்த சிஜு (47) காரை ஓட்டி வந்தாா்.
இந்த காா், சேலம் மதுரை 4 வழிச் சாலையில் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அடுத்த கல்வாா்பட்டி கனவாய்மேடு அருகே வந்த போது விபத்துக்குள்ளாகி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து அந்தப் பகுதியில் இருந்த மின் கம்பத்தில் மோதியது.
இதில் காரில் பயணித்த 4 பேரும் பலத்த காயமடைந்தனா். இவா்கள் சிகிச்சைக்காக வேடசந்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். விபத்து குறித்து கூம்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
