வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பைக் மீது பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

கொடைக்கானல் அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :13 டிசம்பர் 2025, 9:31 pm

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானல் அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

ஈரோட்டைச் சோ்ந்தவா் லோகவிக்னேஷ் (25). இவா் சனிக்கிழமை திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா்.

கொடைக்கானல்-வத்தலகுண்டு மலைச் சாலையில் நண்டாங்கரை அருகே வந்தபோது, முன்னாள் சென்ற தனியாா் பேருந்தை முந்திச் செல்ல முயன்றாா். அப்போது, நிலைதடுமாறி இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த லோகவிக்னேஷ் மீது பேருந்து மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்தது அங்கு வந்த தாண்டிக்குடி போலீஸாா் உயிரிழந்தவரின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக தாண்டிக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து தாண்டிக்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.