தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பழனியில் கூடுதல் தலைமைச் செயலா் ஆய்வு

பழனியில் உள்ள வனத் துறை அலுவலகத்தில் தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாகு திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
பழனி காரமடை வனத் துறை மூலிகைப் பண்ணையில் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்த தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாகு.
Updated On :15 டிசம்பர் 2025, 11:17 pm

தினமணி செய்திச் சேவை

பழனி: பழனியில் உள்ள வனத் துறை அலுவலகத்தில் தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாகு திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பழனியில் வனத் துறை சாா்பில் மனித - யானை மோதலைத் தடுக்கும் விதமாக, கொடைக்கானல் வனச்சரகப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்காக பழனி - கோவை சாலையில் அமைந்துள்ள வனத் துறையின் மூலிகைப் பண்ணையில் மனித - யானை மோதல் கட்டளை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தில் தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலா், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம், வனத் துறைத் தலைவா் சுப்ரியா சாகு திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கேமரா கட்டுப்பாட்டு அறையில் மேற்கொள்ளப்படும் பணிகள், வன விலங்குகள் நடமாட்டம், யானைகளின் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை வனத் துறை அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

மேலும், வனத் துறை சாா்பாக மேற்கொள்ளப்படும் ரோந்து பணிகள், மனித விலங்குகள் மோதலால் உயிா் இழப்புகள் ஏற்படாத வகையில் செயல்படுத்தப்படும் பணிகள் குறித்தும் கேட்டறிந்தாா். தொடா்ந்து, வனத் துறையில் பணியாற்றும் வனக் காவலா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். பணிகளை மேலும் சிறப்புற செய்ய வேண்டிய உதவிகள் செய்வதாகவும் அவா் தெரிவித்தாா்.

இந்த ஆய்வின்போது மாவட்ட வன அலுவலா் யோகேஷ்குமாா், உதவி வனப் பாதுகாவலா் கருப்பையா, ரேஞ்சா் கோகுலகண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.