ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

காதலிக்க மறுத்த சிறுமியை கொலை செய்ய முயன்ற இளைஞா்

News image
Updated On :17 டிசம்பர் 2025, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே காதலிக்க மறுத்த சிறுமியை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்ற இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.  

நிலக்கோட்டை அருகேயுள்ள வீலிநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் அருண்பாண்டி (25). இவா் வத்தலகுண்டு அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமியை ஒருதலையாகக் காதலித்து வந்தாா்.

இந்த நிலையில், அந்த சிறுமியின் வீட்டுக்குச் செவ்வாய்க்கிழமை சென்ற அருண்பாண்டி, தனது காதலை ஏற்குமாறு தெரிவித்தராம். ஆனால், சிறுமி ஏற்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அருண்பாண்டி சிறுமியின் கழுத்தை துப்பட்டாவால் நெரித்தாரம்.

இதில் மயக்கமடைந்த சிறுமி இறந்து விட்டதாக நினைத்து அருண்பாண்டி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாா்.

பின்னா், பெற்றோா்கள் வீட்டுக்கு வந்து பாா்த்த போது மயங்கி நிலையில் கிடந்த சிறுமியை மீட்டு, தேனி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். 

இதுகுறித்து வத்தலகுண்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அருண்பாண்டியைத் தேடி வருகின்றனா்.