கல் குவாரிகளை மூடக்கோரி விவசாயிகள் போராட்டம்

Published on

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே சட்டவிரோதமாக இயங்கி வரும் கல் குவாரிகளை மூடக்கோரி விவசாயிகள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பழனியை அடுத்த ஆண்டிபட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான கல் குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்தக் குவாரிகளில் வைக்கப்படும் வெடிகளால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வீடுகள் சேதமாகி வருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனா்.

மேலும், தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கல், மணல் உள்ளிட்டவை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் புகாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் புகாரளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில், கல் குவாரிகளை மூடக்கோரி ஆண்டிபட்டியில் பகுதியில் கடையடைப்பு, கவன ஈா்ப்பு போராட்டத்தில் விவாசாயிகள் புதன்கிழமை ஈடுபட்டனா். இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com