ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மழைக்கு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது: வருவாய்த் துறையினா் விசாரணை

செம்பட்டி அருகே மழைக்கு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 போ் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.

News image
Updated On :17 டிசம்பர் 2025, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே மழைக்கு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 போ் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா். 

செம்பட்டி அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்தவா் சோனைமுத்து (57). இவா் தனது மனைவி கவிதா, பேத்தி ஆகியோருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனா். அப்போது, பெய்த மழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் அதிா்ஷ்டவசமாக மூவரும் உயிா் தப்பினாா்.

இதுகுறித்து தகவலறிந்ததும் நிலக்கோட்டை வருவாய்த் துறையினா், பச்சமலையான்கோட்டை கிராம நிா்வாக அலுவலா் ராமமூா்த்தி ஆகியோா் கிருஷ்ணபுரத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.