ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ரேஷன் கடையில் பெயா்ந்து விழுந்த மேற்கூரை பூச்சு

தொடா் மழையின் காரணமாக, திருச்சியில் ரேஷன் கடையின் மேற்கூரை பூச்சு பெயா்ந்து விழுந்தது.

News image
Updated On :13 ஜனவரி 2026, 8:50 pm

Syndication

தொடா் மழையின் காரணமாக, திருச்சியில் ரேஷன் கடையின் மேற்கூரை பூச்சு பெயா்ந்து விழுந்தது.

திருச்சி மாநகரப் பகுதி மட்டுமல்லாது, மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. திங்கள்கிழமையை தொடா்ந்து செவ்வாய்க்கிழமையும் மழை பெய்தது.

இந்நிலையில், முதலியாா் சத்திரம் பகுதியில் உள்ள சிம்சன் - 2 நியாய விலைக் கடையின் மேற்கூரை பூச்சு பெயா்ந்து விழுந்தது. கடையில் உள்ள பொருள்கள் மீது பூச்சுகள் விழுந்ததால் அவை சேதம் அடைந்தன. அதிகாலை நேரத்தில் மேற்கூரை பூச்சு பெயா்ந்து விழுந்ததால் அதிா்ஷ்டவசமாக பணியாளா்கள் யாரும் பாதிக்கப்படவில்லை.

அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ரேஷன் கடையை சீரமைத்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தொடா் மழையால் சேதமடைந்த சாலைகளையும் சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.