திண்டுக்கல்
பழனி கோயில் உண்டியல் எண்ணிக்கை ரூ.1.46 கோடி
பழனி மலைக் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையின்போது ரூ.1.46 கோடி காணிக்கையாகக் கிடைத்தது.
பழனி மலைக் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையின்போது ரூ.1.46 கோடி காணிக்கையாகக் கிடைத்தது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் காா்த்திகை மாதத்தை முன்னிட்டு, பக்தா்கள் குவிந்த நிலையில் கடந்த டிச.17-ஆம் தேதி உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது. இதில் 2.62 கோடி ரூபாய் காணிக்கையாகக் கிடைக்கப் பெற்றது.
இந்த நிலையில், வியாழக்கிழமை தைப் பூச விழா குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்ற நிலையில், வெள்ளிக்கிழமை (டிச.19) மீதமுள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணிக்கை நடைபெற்றது.
இதில் பக்தா்கள் காணிக்கையாக ரூ.1.46 கோடி ரொக்கம், 169 கிராம் தங்கம், 2.27 கிலோ வெள்ளி, 312 வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் கிடைத்தன. உண்டியல் எண்ணிக்கையின்போது இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.
