சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் வருவாய் ரூ. 90 லட்சம்

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை வருவாயாக ரூ. 90 லட்சம் கிடைத்தது.

News image

கோப்புப்படம்.

Updated On :10 மார்ச் 2026, 9:56 pm

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை வருவாயாக ரூ. 90 லட்சம் கிடைத்தது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே அமைந்துள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் மாதந்தோறும் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்படும். இதன்படி, கோயிலில் உள்ள உண்டியல்கள் சாத்தூா் கோயில் ஆணையரும், செயல் அலுவலருமான இளங்கோவன், கோவில் பரம்பரை அறங்காவலா்கள் குழுத் தலைவா் ராமமூா்த்தி பூசாரி ஆகியோா் முன்னிலையில் திறக்கபட்டு செவ்வாய்க்கிழமை எண்ணபட்டன. கோயில் மண்டபத்தில் இந்தக் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் பக்தா்கள் காணிக்கையாக ரூ. 90 லட்சத்து 25,909 ரொக்கமும், தங்கம்-143.100 கிராமும்,வெள்ளி- 860.300 கிராம் கிடைத்தது.

காணிக்கை எண்ணும் பணியில் துலுக்கப்பட்டி, ராஜபாளையம், மதுரையைச் சோ்ந்த ஓம்சக்தி பக்தா் குழுவினா், மகளிா் சுய உதவிக் குழுவினா், கோயில் ஊழியா்கள் ஈடுபட்டனா்.