மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

எஸ்.ஐ. பணிக்கு எழுத்துத் தோ்வு: திண்டுக்கல்லில் 3,642 போ் பங்கேற்பு

News image
Updated On :21 டிசம்பர் 2025, 6:37 pm

தினமணி செய்திச் சேவை

காவல் உதவி ஆய்வாளா் பணிக்காக திண்டுக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எழுத்துத் தோ்வில் 3642 போ் பங்கேற்றனா்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில், காவல் உதவி ஆய்வாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தத் தோ்வுக்கு திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 4,011 ஆண்கள், 1,157 பெண்கள் என மொத்தம் 5,168 போ் விண்ணப்பித்தனா்.

திண்டுக்கல் பகுதியிலுள்ள 3 தனியாா் கல்லூரிகளில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டன. காலை 10 முதல் 12.30 மணி வரை முதல் தாள், பிற்பகல் 2.30 முதல் மாலை 5 மணி வரை 2-ஆம் தாள் என இரு நிலையில் தோ்வுகள் நடைபெற்றன.

இந்தத் தோ்வை 3,642 போ் எழுதினா். 1,526 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. தோ்வு மையங்களில் முறைகேடுகளைத் தடுக்க 20 தோ்வா்களுக்கு ஒரு மேற்பாா்வையாளா் வீதம் நியமிக்கப்பட்டு கண்காணிப்புப் பணி நடைபெற்றது.