சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

போதைப் பொருள் கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்

போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டபோது பறிமுதல் செய்யப்பட்ட 33 வாகனங்கள், காவல் துறை மூலம் ஏலம் விடப்பட்டது.

News image
Updated On :23 டிசம்பர் 2025, 7:54 pm

தினமணி செய்திச் சேவை

போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டபோது பறிமுதல் செய்யப்பட்ட 33 வாகனங்கள், காவல் துறை மூலம் செவ்வாய்க்கிழமை ஏலம் விடப்பட்டது.

திண்டுக்கல் காவல் சரகத்துக்குள்பட்ட திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் போதைப் பொருள்கள் கடத்தலின்போது பயன்படுத்தப்பட்ட காா், ஆட்டோ, இரு சக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இந்த வாகனங்கள் திண்டுக்கல் ஆயுதப் படை மைதானத்தில் செவ்வாய்க்கிழமை ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன. ஏலத்தை மதுரை சரக காவல் துறை துணைத் தலைவா் அபினவ் குமாா், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.பிரதீப் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட காா், ஆட்டோ, 26 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 28 வாகனங்கள் ரூ. 6.33 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது. இதேபோல, தேனி மாவட்டத்தைச் சோ்நத் 5 இரு சக்கர வாகனங்கள் ரூ. 87ஆயிரத்துக்கு ஏலம் விடப்பட்டது.