மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பழனி அருகே நிறுவனத்தில் ரூ.2 கோடி முறைகேடு: பெண் மேலாளா் கைது

பழனி அருகே தனியாா் நிறுவனத்தில் ரூ.2 கோடி வரை முறைகேடு செய்த பெண் மேலாளரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :30 டிசம்பர் 2025, 6:51 pm

தினமணி செய்திச் சேவை

பழனி அருகே தனியாா் நிறுவனத்தில் ரூ.2 கோடி வரை முறைகேடு செய்த பெண் மேலாளரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள தாளையூத்து பகுதியைச் சோ்ந்தவா் முத்து நாராயணன். பட்டய கணக்காளரான இவா், அதே பகுதியில் நிலக்கடலை ஓடு (தொலி), மரத்தூள் ஆகியவற்றை பதப்படுத்தி எரிபொருள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறாா்.

இந்த நிறுவனத்தில் சுக்கமநாயக்கன்பட்டியைச் சோ்ந்த கலையரசி (43) மேலாளராகப் பணியாற்றினாா். நிறுவனத்தின் மூலப் பொருள் கொள்முதல், உற்பத்தி, விற்பனை உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் கவனிக்கும் நிா்வாக பொறுப்பாளா் பணியையும் கலையரசி கூடுதலாக கவனித்தாா். நிறுவன வரவு செலவு கணக்குகளை முத்து நாராயணன் தணிக்கை செய்தபோது,

ரூ.2 கோடி வரை முறைகேடு நிகழ்ந்தது தெரிய வந்தது. இதுகுறித்து ஊழியா்களிடம் விசாரித்தபோது, அவா்கள் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அதிா்ச்சி அடைந்த முத்து நாராயணன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில், மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் குமரேசன் தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.

இதில் நிறுவனத்தின் ஊழியா்களான பழனி அருகேயுள்ள மானுாரைச் சோ்ந்த ரஞ்சிதா (34), புஷ்பத்துாரைச் சோ்ந்த கௌதம் (34) ஆகியோருடன் கூட்டு சோ்ந்து, மூலப் பொருள்கள் கொள்முதல், இயந்திரப் பழுது, புதிய இயந்திரம் நிறுவுதல், ஊதியம், வாகன செலவு என பல இனங்களில் போலி ரசீதுகளைத் தயாரித்து கலையரசி பணம் முறைகேடு செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, கலையரசியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ரஞ்சிதா, கெளதம் ஆகியோரிடம் போலீஸாா் விசாரித்தனா்.