மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம்

Updated On :3 ஜனவரி 2025, 6:32 pm

பழனியில் மதுவிலக்கு காவல் துறை சாா்பில் கள்ளச் சாராயம், போதைப் பொருள்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பழனி பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், திரளான நாட்டுப்புற கலைஞா்கள் நடனமாடி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதைத் தொடா்ந்து மதுவிலக்கு காவல் ஆய்வாளா் லாவண்யா, வருவாய்த் துறை அதிகாரிகள், போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்தனா். பிறகு போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், குடும்ப சூழல் பாதிக்கப்படுவது குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.