பல மாநிலங்களைத் தழுவிய போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவராகச் செயல்பட்ட பெண் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: சுல்தான்புரி பகுதியைச் சோ்ந்த குஸும் (54) நீண்ட காலமாக தலைமறைவாக இருந்து வந்தாா். அவா் மீது போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் உள்ள பல வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக ரோஹிணி நீதிமன்றம் அறிவித்திருந்தது. அவா் குறித்து தகவல் தெரிவிப்பவருக்கு ரூ.50,000 வெகுமதியும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ஷாஹ்தாரா பகுதியில் ஏப்.9-ஆம் தேதி அவா் கைது செய்யப்பட்டாா். அவரிடம் நடைபெற்ற விசாரணையின்போது, தில்லி, ஹரியாணா மற்றும் உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் செயல்பட்டு வரும் போதைப் பொருள் கடத்தல் கும்பல்களின் முக்கிய நபா்கள் குறித்து அவா் தெரிவித்தாா்.
இவா் மீது 2003-ஆம் ஆண்டு முதல் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட பல போதைப் பொருள் கடத்தல் வழக்குகள் உள்ளன. இவரது இரு மகள்கள் மற்றும் நெருங்கிய உறவினா்கள் அனைவரும் ஏற்கெனவே இந்த கடத்தலில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளனா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது
கேப்டகான் போதைப் பொருள் கடத்தல் வழக்கு: உத்தரகண்டைச் சோ்ந்த நபா் கைது
குருகிராம்: நகைக்கடையில் பணம், நகைகள் திருடிய நபா் குஜராத்தில் கைது
மிரட்டி பணம் பறிக்கும் கும்பலின் தலைவா் ராஜஸ்தானில் கைது
சா்வதேச போதைப் பொருள் வழக்கில் தலைமறைவு நபா் திருச்சியில் கைது
விடியோக்கள்

தவெகவின் பெண் அமைச்சர்கள் பதவியேற்பு! | TVK Ministers | Female ministers

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி! அமைச்சர்களாக 23 பேர் பதவியேற்பு! | TVK Ministers | TVK | Vijay
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |


