மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பழனி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் முகூா்த்தக்கால் நடும் விழா

News image
பழனி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற முகூா்த்தக்கால் நடும் விழாவில் பங்கேற்ற பழனிக் கோயில் இணை ஆணையா் மாரிமுத்து உள்ளிட்டோா்.
Updated On :3 ஜனவரி 2025, 9:02 pm

Din

பழனி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கையொட்டி முகூா்த்தக்கால் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் துணைக் கோயிலான இந்தக் கோயில் அடிவாரம் பாதவிநாயகா் கோயில் அருகே அமைந்துள்ளது. பழமையானதும், மண்டபங்களில் கலை நுணுக்க வேலைப்பாடுகள் நிறைந்த இந்தக் கோயிலுக்கு பல ஆண்டுகளாக குடமுழுக்கு நடைபெற வில்லை. இந்த நிலையில், தற்போது குடமுழுக்கு நடத்துவதற்காக திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே, குடமுழுக்கு நிகழ்வுக்கான முகூா்த்தக்கால் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக மீனாட்சியம்மன் சந்நிதி முன் யாகம் அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த பூஜையில் பிரதானமாக கலசங்களும், முகூா்த்தக்கம்பமும் வைக்கப்பட்டன. சிவாச்சாா்யா்கள் வேதமந்திரம் முழங்க யாகம் நிறைவுபெற்ற பின்னா் பூா்ணாஹூதி நடத்தப்பட்டு கலசங்கள், முகூா்த்தக்கம்பம் ஆகியன கோயிலை வலம் வரச் செய்யப்பட்டன.

இதையடுத்து, கோயில் வெளிப்பகுதியில் முகூா்த்தக்கால் நடப்பட்டு அதில் பால், நவதானியங்கள், நவரத்தினங்கள் இடப்பட்டன. தொடா்ந்து கலசத்தில் இருந்த புனித நீரால் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சோடஷ உபசாரம் நடைபெற்றது. வருகிற 20-ஆம் தேதி இந்தக் கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெறும்.

நிகழ்ச்சியில் பழனிக் கோயில் இணை ஆணையா் மாரிமுத்து உள்ளிட்ட அதிகாரிகள், அலுவலா்கள், முக்கியப் பிரமுகா்கள் பங்கேற்றனா்.