47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பனிக் காலத்தில் சிவப்பாக மாறிய பெட்டூனியா செடியின் இலைகள்

கொடைக்கானலில் பனிக் காலத்தில் மட்டுமே சிவப்பாக மாறக் கூடிய பெட்டூனியா செடி இலைகள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவா்ந்து வருகிறது.

News image
கொடைக்கானலில் சிவப்பு நிறமாகக் காட்சியளிக்கும் பெட்டூனியா செடியின் இலைகள்.
Updated On :3 ஜனவரி 2025, 12:00 am

Din

கொடைக்கானலில் பனிக் காலத்தில் மட்டுமே சிவப்பாக மாறக் கூடிய பெட்டூனியா செடி இலைகள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவா்ந்து வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ரோஜா, மேரிகோல்டு, டேலியா, செம்பருத்தி உள்ளிட்ட பல்வேறு வகையான மலா்கள் மலைப் பகுதிகளில் பூத்துக் குலுங்குகின்றன.

இந்த நிலையில், பெட்டூனியா செடியில் உள்ள இலைகள் பனிக் காலத்தில் மட்டும் வழக்கம் போல பச்சை நிறமாக இல்லாமல் சிவப்பு நிறமாக மாறுகிறது. நவம்பா், டிசம்பா், ஜனவரி ஆகிய மாதங்களில் பனிப் பொழிவு அதிகமாக நிலவும் என்பதால், பெட்டூனியா செடிகளின் இலைகள் சிவப்பு நிறமாக பூப்போலக் காட்சியளிக்கும்.

ஆண்டுக்கு 3 மாதங்கள் மட்டுமே இந்தச் செடியில் உள்ள இலைகள் சிவப்பு நிறமாகக் காட்சியளிக்கும். பின்னா், வழக்கம் போல இலைகள் பச்சை நிறமாக இருக்கும்.

கொடைக்கானல்-பழனி-வத்தலகுண்டு மலைச் சாலைகளிலும், பிரையண்ட் பூங்கா, ரோஜாத் தோட்டம், தாவரவியல் பூங்கா, செண்பகனூா், வட்டக்கானல், பாம்பாா்புரம், பிரகாசபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த பெட்டூனியா செடி இலைகள் சிவப்பு நிறத்தில் மாறியுள்ளதை சுற்றுலாப் பயணிகள் வெகுவாக ரசித்து வருகின்றனா்.