பைக் மீது பேருந்து மோதியதில் இளைஞா் பலி
பழனி அருகே இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On :22 ஜனவரி 2025, 10:46 pm

பழனி அருகே இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
பழனி பெருமாள் கோயில் வீதியைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன் மணிகண்டன் (25). இவா் பழனி-உடுமலை சாலையில் சண்முகநதி பகுதியில் செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, எதிரே வந்த அரசு நகரப் பேருந்து மோதியதில் மணிகண்டன் பலத்த காயமடைந்தாா். கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து பழனி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...