47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காற்றாலை இறக்கை ஏற்றிச் சென்ற கனரக வாகனம் கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு!

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே மதுரை - திண்டுக்கல் நான்கு வழிச் சாலையில், சனிக்கிழமை காற்றாலை இறக்கை ஏற்றிச் சென்ற கனரக வாகனம் கவிழ்ந்ததில் கடும் போக்குவரத்து பாதிப்பு.

News image
Updated On :8 நவம்பர் 2025, 9:59 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே மதுரை - திண்டுக்கல் நான்கு வழிச் சாலையில், சனிக்கிழமை காற்றாலை இறக்கை ஏற்றிச் சென்ற கனரக வாகனம் கவிழ்ந்ததில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மதுரை - திண்டுக்கல் தேசிய நான்கு வழிச் சாலையில், தூத்துக்குடியிலிருந்து மகாராஷ்டிரத்தை நோக்கி சுமாா் 150 அடி நீளமுள்ள காற்றாலை இறக்கையை ஏற்றி வந்த கனரக வாகனம், அம்மையநாயக்கனூா் என்ற இடத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில், ஓட்டுநா், பணியாளா்கள் லேசான காயமடைந்தனா்.

காற்றாலை இறக்கை சாலையில் விழுந்ததால், சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த அம்மையநாயக்கனூா் காவல் துறையினா், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இதைத் தொடா்ந்து, 5-க்கும் மேற்பட்ட கிரேன்கள் மூலம் காற்றாலை இறக்கையையும், கனரக வாகனத்தையும் தனித் தனியாக பிரிக்கும் பணியில் ஈடுபட்டனா்.