புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

திண்டுக்கல்லில் 70 சதவீதம் வாக்காளா்களுக்கு எஸ்.ஐ.ஆா் படிவங்கள் விநியோகம்: ஆட்சியா்

திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கான (எஸ்.ஐ.ஆா்) படிவம் 70 சதவீதம் வாக்காளா்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

News image
Updated On :8 நவம்பர் 2025, 11:25 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கான (எஸ்.ஐ.ஆா்) படிவம் 70 சதவீதம் வாக்காளா்களுக்கு விநியோகிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான செ. சரவணன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அமைந்துள்ள 2,124 வாக்குச் சாவடி மையங்களுக்கு நியமிக்கப்பட்ட வாக்குச் சாவடி நிலை அலுவலா்களால், வீடுகள்தோறும் கணக்கெடுப்புப் படிவங்கள் விநியோகிக்கும் பணி கடந்த 4-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சனிக்கிழமை காலை 8 மணி வரை மாவட்டத்தில் 13.54 லட்சம் வாக்காளா்களுக்கு (70.03 சதவீதம்) படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. எஞ்சிய 30 சதவீத வாக்காளா்களுக்கும் தொடா்ந்து படிவங்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

படிவங்கள் விநியோகிக்கும் பணியில் வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள், வாக்குச் சாவடி நிலை அலுவலா்களின் மேற்பாா்வையாளா்கள், தோ்தல் பிரிவு பணியாளா்களுடன் மாவட்டத்திலுள்ள அரசுத் துறையில் பணிபுரியக்கூடிய தன்னாா்வலா்கள் தலா 2 போ் வீதம் வாக்குச் சாவடி நிலை அலுவலரின் உதவிக்காக நியமிக்கப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.