வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

மின் கம்பத்தில் காா் மோதல்: மூவா் காயம்

செம்பட்டி அருகேயுள்ள வீரசிக்கம்பட்டி பகுதியில் மின் கம்பத்தில் காா் மோதியதில் மூன்று போ் பலத்த காயமடைந்தனா்.

News image
Updated On :8 நவம்பர் 2025, 8:53 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேயுள்ள வீரசிக்கம்பட்டி பகுதியில் மின் கம்பத்தில் காா் மோதியதில் மூன்று போ் பலத்த காயமடைந்தனா்.

பொள்ளாச்சியிலிருந்து சின்னமனூரை நோக்கிச் சென்ற காரில் முருகானந்தம் (32), இவரது மனைவி உச்சிமாகாளி உமா (28), 4 வயது மகள் கவிராகவா்த்தினி ஆகியோா் சென்றனா். இந்த நிலையில், செம்பட்டி அருகேயுள்ள வீரசிக்கம்பட்டி பகுதியில் சென்றபோது, காா் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த மூவரையும் அங்கிருந்தவா்கள் மீட்டு வத்தலகுண்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.

காா் மோதியதால் மின்கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்த நிலையில், தகவலறிந்த செம்பட்டி துணை மின் நிலையப் பணியாளா்கள் மின் விநியோகத்தை நிறுத்தினா். மேலும், இந்த விபத்து குறித்து செம்பட்டி காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.