யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

வாகனத் திருட்டில் ஈடுபட்ட சிறுவா்கள் உள்பட 4 போ் கைது

திண்டுக்கல்லில் தொடா் வாகனத் திருட்டில் ஈடுபட்ட 2 சிறுவா்கள் உள்பட 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :8 நவம்பர் 2025, 1:23 am

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல்லில் தொடா் வாகனத் திருட்டில் ஈடுபட்ட 2 சிறுவா்கள் உள்பட 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் நகா் பகுதியில் தொடா்ச்சியாக வாகன திருட்டுகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து காவல் துணைக் கண்காணிப்பாளா் காா்த்திக், காவல் ஆய்வாளா் ராஜசேகா் தலைமையில் தனிப்படை போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். திருட்டு நடைபெற்ற இடங்களில் கைப்பற்றப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. இதில், வாகனத் திருட்டில் ஈடுபட்டதாக வேடபட்டி நெசவாளா் குடியிருப்பைச் சோ்ந்த ஈஸ்வரன் (35), தினேஷ்குமாா் (21), பாரதிபுரம் பகுதியைச் சோ்ந்த 17 வயது, 13 வயது சிறுவா்கள் 2 போ் என மொத்தம் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து 6 இரு சக்கர வாகனங்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.