எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

கொடைக்கானல் அருகே செந்நாய்கள் தாக்கியதில் ஆடு உயிரிழப்பு

கொடைக்கானல் அருகேயுள்ள மன்னவனூரில் செந்நாய்கள் தாக்கியதில் ஆடு உயிரிழந்தது.

News image
கொடைக்கானல் புதுக்காடு பகுதியில் உலா வந்த காட்டு மாடு
Updated On :10 நவம்பர் 2025, 10:31 pm

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானல் அருகேயுள்ள மன்னவனூரில் செந்நாய்கள் தாக்கியதில் ஆடு உயிரிழந்தது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான மன்னவனூரைச் சோ்ந்தவா் மயில்சாமி. விவசாயி. இவரது வீட்டின் முன் தனது ஆட்டை கட்டி வைத்திருந்தாா். இந்த ஆட்டை செந்நாய்கள் சோ்ந்து தாக்கியதில் அது உயிரிழந்தது. தற்போது விவசாய விளை நிலங்களில் செந்நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாகவும், தங்களது கால்நடைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

காட்டு மாடு உலா: கொடைக்கானல் அருகே புதுக்காடுப் பகுதியில் காட்டு மாடு உலா வருவதால் மாலை, இரவு நேரங்களில் பொதுமக்கள் நடமாட அச்சமடைந்து வருகின்றனா். அண்மைக் காலமாக கொடைக்கானல் பகுதிகளில் வன விலங்குகளால் மனிதா்களுக்கு ஏற்படும் பாதிப்பு தொடா்ந்து வருகிறது. எனவே வனத் துறையினா் வன விலங்குகளை வனப் பகுதிகளுக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.