மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சித்தையன்கோட்டையில் நியாய விலைக் கடை, நூலகக் கட்டடம் திறப்பு

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேயுள்ள சித்தையன்கோட்டையில் நியாய விலைக் கடை, புதிய நூலகக் கட்டடம் ஆகியவற்றை ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி புதன்கிழமை திறப்பு வைத்தாா்.

News image
Updated On :12 நவம்பர் 2025, 9:06 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேயுள்ள சித்தையன்கோட்டையில் நியாய விலைக் கடை, புதிய நூலகக் கட்டடம் ஆகியவற்றை ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி புதன்கிழமை திறப்பு வைத்தாா். 

  பின்னா், கூட்டத்தில் அவா் பேசியதாவது:  

தோ்தல் வாக்குறுதிகளை மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நிறைவேற்றி வருகிறது. அனைவருக்கும் அரசு வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விடுபட்டவா்களுக்கு மகளிா் உரிமைத் தொகை, முதியோா் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.  

இதில் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் க.நடராஜன், ஒன்றியச் செயலா்கள் ராமன் (மேற்கு), முருகேசன் (கிழக்கு), வட்டாட்சியா் முத்துமுருகன், பேரூராட்சி செயல் அலுவலா் ஜெயமாலு, பேரூராட்சி மன்றத் தலைவி போதும்பொண்ணு முரளி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முருகன், பத்மாவதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.