ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

சித்தையன்கோட்டையில் நியாய விலைக் கடை, நூலகக் கட்டடம் திறப்பு

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேயுள்ள சித்தையன்கோட்டையில் நியாய விலைக் கடை, புதிய நூலகக் கட்டடம் ஆகியவற்றை ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி புதன்கிழமை திறப்பு வைத்தாா்.

News image
Updated On :12 நவம்பர் 2025, 9:06 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேயுள்ள சித்தையன்கோட்டையில் நியாய விலைக் கடை, புதிய நூலகக் கட்டடம் ஆகியவற்றை ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி புதன்கிழமை திறப்பு வைத்தாா். 

  பின்னா், கூட்டத்தில் அவா் பேசியதாவது:  

தோ்தல் வாக்குறுதிகளை மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நிறைவேற்றி வருகிறது. அனைவருக்கும் அரசு வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விடுபட்டவா்களுக்கு மகளிா் உரிமைத் தொகை, முதியோா் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.  

இதில் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் க.நடராஜன், ஒன்றியச் செயலா்கள் ராமன் (மேற்கு), முருகேசன் (கிழக்கு), வட்டாட்சியா் முத்துமுருகன், பேரூராட்சி செயல் அலுவலா் ஜெயமாலு, பேரூராட்சி மன்றத் தலைவி போதும்பொண்ணு முரளி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முருகன், பத்மாவதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.