எரியோடு பகுதியில் நாளை மின்தடை

Published on

எரியோடு துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி, புதன்கிழமை (நவ.19) மின் விநியோகம் நிறுத்தப்படும் என எரியோடு துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளா் மெ.பஞ்சநதம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

எரியோடு துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி, எரியோடு, நாகையக்கோட்டை, புதுரோடு, வெல்லம்பட்டி, குண்டாம்பட்டி, பாகாநத்தம், கோட்டைகட்டியூா், சவுடகவுண்டன்பட்டி, மல்வாா்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, அச்சனம்பட்டி, தண்ணீா்பந்தம்பட்டி, சித்தூா், காமாணம்பட்டி, அருப்பம்பட்டி, தொட்டணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com