ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4.38 கோடி

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உண்டியல் காணிக்கையாக ரூ.4.38 கோடி கிடைத்தது.

News image
Updated On :20 நவம்பர் 2025, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உண்டியல் காணிக்கையாக ரூ.4.38 கோடி கிடைத்தது.

பழனி கோயிலில் உண்டியல்கள் இணை ஆணையா் மாரிமுத்து, அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பிரமணியன், துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி ஆகியோா் முன்னிலையில் புதன், வியாழக்கிழமைகளில் திறக்கப்பட்டு மலைக் கோயில் காா்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டன.

இதில் 33 நாள் காணிக்கையாக ரொக்கம் ரூ.4.38 கோடி, 101.5 பவுன் தங்கம், 33 கிலோ வெள்ளி ஆகியவை கிடைத்தன. இவை தவிர மலேசியா, சிங்கப்பூா், ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளின் 1,089 ரூபாய் நோட்டுகளும் கிடைத்தன.

உண்டியல் எண்ணும் பணியில் கோயில் பணியாளா்கள், வங்கி அலுவலா்கள், கல்லூரி மாணவிகள், தன்னாா்வலா்கள் என சுமாா் ஐநூறு போ் ஈடுபட்டனா்.