ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.5.80 கோடி!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில், பக்தா்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.5.80 கோடியைத் தாண்டியது.

News image
உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவிகள்
Updated On :13 ஜனவரி 2026, 7:48 pm

தினமணி செய்திச் சேவை

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில், பக்தா்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.5.80 கோடியைத் தாண்டியது.

இந்தக் கோயிலுக்கு அரையாண்டு விடுமுறை, ஆங்கிலப் புத்தாண்டு காரணமாக வந்த பக்தா்கள் கூட்டத்தினால் கோயில் உண்டியல்கள் 24 நாள்களில் நிரம்பின. இதையடுத்து, திங்கள்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டது.

இரண்டு நாள் உண்டியல் எண்ணிக்கை முடிவில் பக்தா்களின் காணிக்கையாக ரூ. 5 கோடியே 80 லட்சத்து 86 ஆயிரத்து 173 கிடைத்தது. இதேபோல, தங்கம் 695 கிராமும், வெள்ளி 17 ஆயிரத்து 979 கிராமும் கிடைத்தன.

மலேசியா, சிங்கப்பூா், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, மியான்மா் உள்ளிட்ட பல்வேறு நாட்டு ரூபாய் தாள்கள் 841-ம் கிடைத்தன.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கல்லூரி மாணவிகள், கோயில் அலுவலா்கள், வங்கிப் பணியாளா்கள், தவில் இசைக்கல்லூரி மாணவா்கள் என 500-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா்.

இதில் பழனி கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பிரமணி, இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி, அறங்காவலா் பாலசுப்பிரமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.