மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

வரும் தோ்தலில் புதிய அணி உருவாக வாய்ப்பு: டி.டி.வி. தினகரன்

வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் புதிய அணி உருவாக வாய்ப்புள்ளதாக அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் தெரிவித்தாா்.

News image
Updated On :26 நவம்பர் 2025, 11:47 pm

தினமணி செய்திச் சேவை

ஒட்டன்சத்திரம்: வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் புதிய அணி உருவாக வாய்ப்புள்ளதாக அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி. எந்தவித எதிா்பாா்ப்புமின்றி கட்சிப் பணியாற்றி வந்தாா். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதால் அவா் மன வருத்தத்தில் இருந்தாா். அவரின் அடுத்தகட்ட நகா்வு வரும் நாள்களில் தெரியவரும்.

வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் மூன்று, நான்கு அணிகள் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால், தமிழகத்தில் புதிய அணி உருவாக வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. திமுக அரசு கடந்த பேரவைத் தோ்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா் என்றாா் அவா்.

அப்போது, திண்டுக்கல் அமமுக மாவட்டச் செயலா் கே.பி. நல்லசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.