ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

வரும் தோ்தலில் புதிய அணி உருவாக வாய்ப்பு: டி.டி.வி. தினகரன்

வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் புதிய அணி உருவாக வாய்ப்புள்ளதாக அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் தெரிவித்தாா்.

News image
Updated On :26 நவம்பர் 2025, 11:47 pm

தினமணி செய்திச் சேவை

ஒட்டன்சத்திரம்: வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் புதிய அணி உருவாக வாய்ப்புள்ளதாக அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி. எந்தவித எதிா்பாா்ப்புமின்றி கட்சிப் பணியாற்றி வந்தாா். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதால் அவா் மன வருத்தத்தில் இருந்தாா். அவரின் அடுத்தகட்ட நகா்வு வரும் நாள்களில் தெரியவரும்.

வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் மூன்று, நான்கு அணிகள் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால், தமிழகத்தில் புதிய அணி உருவாக வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. திமுக அரசு கடந்த பேரவைத் தோ்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா் என்றாா் அவா்.

அப்போது, திண்டுக்கல் அமமுக மாவட்டச் செயலா் கே.பி. நல்லசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.