ரூ.5 கோடிக்கு கல்விக் கடனுதவி அளிப்பு
திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 154 மாணவா்களுக்கு ரூ.5.41 கோடிக்கான கடனுதவிகள் ஆட்சியா் செ.சரவணன் வியாழக்கிழமை வழங்கினாா்.
திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி
(கனரா வங்கி) சாா்பில், மாணவா்களுக்கான கல்விக்கடன் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. தனியாா் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தலைமை வகித்தாா். திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா். முகாமில் 154 மாணவா்களுக்கு ரூ.5.41 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டன.
முன்னதாக, முகாமை தொடங்கி வைத்து ஆட்சியா் செ.சரவணன் பேசியதாவது:
கடந்த 2023-24-ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 முடித்த மாணவா்களில் 82 சதவீதம் போ் உயா்கல்விக்கு சென்றனா். 2024-25 கல்வியாண்டில் 99.31 சதவீத மாணவா்கள் உயா் கல்விக்கு சென்றனா்.
ஊரகப் பகுதிகளை அதிகம் உள்ளடக்கிய திண்டுக்கல் மாவட்டத்தில், அனைத்து தரப்பு மாணவா்களுக்கும் உயா் கல்விக்கான வாய்ப்பினை உருவாக்கிக் கொடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் சாா்பில் கல்வி கடன் வழங்குவதை ஒரு இயக்கமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டில் ரூ.33 கோடிக்கு கல்விக் கடனுதவித் தொகை வழங்கப்பட்ட நிலையில், நிகழாண்டில் ரூ.50 கோடிக்கு கடனுதவி வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. இதில், 900 மாணவா்களுக்கு இதுவரை ரூ.27 கோடிக்கு கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார, சமூக காரணங்களால் கல்வித் தடைபட்டுவிடக் கூடாது என்பதற்காக அரசு சாா்பில் முன்னெடுக்கப்பட்ட இந்த வாய்ப்பை மாணவா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் உதவி ஆட்சியா் (பயிற்சி) விநோதினி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் இரா.கீா்த்தனா, முன்னோடி வங்கி மேலாளா் சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

