பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

கொடைக்கானல் குடியிருப்பு பகுதியில் காட்டு மாடு உலா: பொதுமக்கள் அச்சம்

கொடைக்கானல் குடியிருப்புப் பகுதியில் புதன்கிழமை காட்டுமாடு உலா வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

News image
Updated On :27 நவம்பர் 2025, 12:17 am

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானல்: கொடைக்கானல் குடியிருப்புப் பகுதியில் புதன்கிழமை காட்டுமாடு உலா வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளில் காட்டு மாடுகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், புதன்கிழமை பொ்ன்ஹில் சாலையில் குடியிருப்புப் பகுதியில் காட்டு மாடு ஒன்று புகுந்தது. இதனால், பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத் துறையினா் குடியிருப்புப் பகுதியிலிருந்த காட்டு மாட்டை வனப் பகுதிக்குள் விரட்டினா்.

பொதுமக்கள் கூறியதாவது:

கொடைக்கானல் பகுதிக்கு அண்மைக் காலமாக காட்டு மாடுகள், காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகள் அதிகளவில் வரத் தொடங்கியுள்ளன. வனப் பகுதிகளில் வன விலங்குகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தால் வன விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளுக்கு வருவது குறையும். இதற்கு மாவட்ட வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

வனத் துறையினா் கூறியதாவது:

கொடைக்கானலில் காட்டு மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. குடியிருப்பு பகுதிகளில் காட்டு மாடுகள் உலா வந்தால் உடனடியாக வனத் துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றனா்.