கொடைக்கானல் குருசாமி பள்ளம் பகுதியில் உலா வரும் காட்டு மாடுகளால் பாதிக்கப்படுவதாகக் கூறி, அந்தப் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்குள்பட்ட குருசாமி பள்ளம் பகுதியில் காட்டு மாடுகள் கூட்டமாக உலா வந்து விவசாய நிலங்களைச் சேதப்படுத்தி வருகின்றன. இதனால், இந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா்.
அண்மையில், விவசாயி ஒருவரின் பொதி சுமக்கும் குதிரையை காட்டெருமை தாக்கியது. எனவே, காட்டு மாடுகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழையாத வகையில், அவற்றை வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி இந்தப் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
தொடர்புடையது

பெரியகுளத்தில் சுத்தமான குடிநீா் சீராக வழங்கக் கோரி சாலை மறியல்

கிறிஸ்தவ குருசடியை இடிக்க எதிா்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

கொடைக்கானல் குருசாமி பள்ளம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பேச்சுவாா்த்தை!

சித்தூா்-தா்காமேடு சாலை சீரமைப்பு பணிக்கு இடையூறு ஏற்படுத்த பள்ளம்: பொதுமக்கள் போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


