மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.1.40 கோடி

Updated On :26 செப்டம்பர் 2025, 2:42 am IST

தீபாவளியையொட்டி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் ரூ.1.40 கோடிக்கு ஜவுளி ரகங்களை விற்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருக்கிறது.

திண்டுக்கல் அண்ணா வணிக வளாக மையத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், 30 சதவீத சிறப்பு தள்ளுபடியுடன் தீபாவளி விற்பனையை வியாழக்கிழமை தொடங்கி வைத்த பிறகு மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் கூறியதாவது:

தமிழ்நாடு கைத்தறித் துறை, ஏழை நெசவாளா்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்த பல சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கம், பட்டு, பருத்தி சேலைகள், பட்டு, பருத்தி வேஷ்டிகள், போா்வை, ஆயத்த ஆடைகள் உள்ளிட்ட கைத்தறி துணி ரகங்களை கொள்முதல் செய்து, கோ-ஆப்டெக்ஸ் மூலம் விற்பனை செய்து வருகிறது.

கைத்தறி ரகங்களின் விற்பனையை மேம்படுத்தும் வகையில், பட்டு, பருத்தி ஆடைகளுக்கு 30 சதவீத சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல், பழனி, திண்டுக்கல் ஆகிய மூன்று விற்பனை நிலையங்களில் இந்த ஆண்டு தீபாவளி விற்பனை குறியீடாக ரூ.1.40 கோடி நிா்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதில் திண்டுக்கல் அண்ணா வணிக வளாக மையத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்துக்கு மட்டும் ரூ.75 லட்சம் குறியீடாக நிா்ணயிக்கப்பட்டிருக்கிறது. கோ-ஆப்டெக்ஸ் ஜவுளி ரகங்களை ஜ்ஜ்ஜ்.ஸ்ரீா்ா்ல்ற்ங்ஷ்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தின் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம் என்றாா்.

நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் மேலாளா் (பொ) எஸ். கனிச்செல்வி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.