மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

திண்டுக்கல் மாவட்டத்தில் 57 மனுக்கள் நிராகரிப்பு

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடுவதற்கு மொத்தம் 220 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், 57 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 4:25 am IST

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடுவதற்கு மொத்தம் 220 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், 57 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூா், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல், வேடசந்தூா் என மொத்தம் 7 பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளில் போட்டியிடுவதற்காக மொத்தம் 220 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

பழனி தொகுதியில் 33, ஒட்டன்சத்திரத்தில் 27, ஆத்தூரில் 26, நிலக்கோட்டையில் 28, நத்தத்தில் 41, திண்டுக்கல்லில் 35, வேடசந்தூரில் 30 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த நிலையில், வேட்பு மனு பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பழனி தொகுதியில் 7 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 26 மனுக்கள் ஏற்கப்பட்டன. ஒட்டன்சத்திரத்தில் 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 19 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆத்தூரில் 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 18 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. நிலக்கோட்டையில் 11 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 17 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. நத்தம் தொகுதியில் 10 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 31 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. திண்டுக்கல்லில் 6 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 29 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. வேடசந்தூரில் 7 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 23 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.