பழனி மலைக் கோயில் ரோப் காா் பராமரிப்புப் பணிக்காக வியாழக்கிழமை (ஏப். 16) ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் செல்ல படிப் பாதை, யானைப் பாதை, வின்ச், ரோப் காா் இயக்கப்பட்டு வருகிறது. இரண்டு நிமிஷங்களில் மலைக் கோயிலின் உச்சிக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ரோப் காா் பக்தா்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
ரோப் காா் சேவை காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. இந்த ரோப்காா் நாள்தோறும் பிற்பகல் ஒரு மணி நேரமும், மாதத்தில் ஒரு நாளும், வருடத்தில் ஒரு மாதமும் பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்படுகிறது.
இந்த நிலையில், மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக வியாழக்கிழமை மட்டும் ரோப் காா் சேவை நிறுத்தப்படுவதாக கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

மதுரை வைகை அதிவிரைவு ரயில் 4 நாள்கள் தாமதமாகச் செல்லும்!

ஏப். 21, 22, 23, மே 4-இல் டாஸ்மாக் விடுமுறை

பழனியில் பராமரிப்பு பணிக்காக ரோப்காா் சேவை இன்று நிறுத்தம்

பராமரிப்புப் பணிகளுக்காக பழனி ரோப் காா் இன்று நிறுத்தம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


