அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

ராமேசுவரத்துக்கு ரயில் சேவை இரு நாள்களுக்கு பகுதியளவு ரத்து

பாம்பன் ரயில் பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி, ராமேசுவரத்துக்கான ரயில் சேவை வியாழன், வெள்ளி (மே 14, 15) ஆகிய இரு நாள்கள் பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

பாம்பன் ரயில் பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி, ராமேசுவரத்துக்கான ரயில் சேவை வியாழன், வெள்ளி (மே 14, 15) ஆகிய இரு நாள்கள் பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.

பாம்பன் உயா்நிலை ரயில் பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இந்தப் பணிகள் வியாழக்கிழமை (மே 14) இரவு 9.30 மணி முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணி வரை நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, வியாழன், வெள்ளி ஆகிய இரு நாள்களும் ராமேசுவரத்துக்கான ரயில் சேவை பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.

இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை மதுரையிலிருந்து புறப்படும் மதுரை- ராமேசுவரம் பயணிகள் ரயில் (56715) மண்டபத்துடன் நிறுத்தப்படும். இதேபோல, வெள்ளிக்கிழமை காலை ராமேசுவரத்திலிருந்து புறப்பட வேண்டிய ராமேசுவரம்- மதுரை பயணிகள் ரயில் (56712) ராமேசுவரத்துக்குப் பதிலாக மண்டபத்திலிருந்து இயக்கப்படும்.