சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

தமிழகத்தில் மதவாத, பிரிவினைவாத சக்திகளுக்கு இடம் தரக் கூடாது: அமைச்சா் இ.பெரியசாமி

தமிழகத்தில் மதவாத, பிரிவினைவாத சக்திகளுக்கு இடம் தரக் கூடாது என அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா்.

News image

இ.பெரியசாமி

Updated On :15 ஏப்ரல் 2026, 3:39 am IST

தமிழகத்தில் மதவாத, பிரிவினைவாத சக்திகளுக்கு இடம் தரக் கூடாது என அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா்.

திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் பெ.செந்தில்குமாரை ஆதரித்து, திண்டுக்கல் முத்தழகுபட்டி, குடைப்பாறைப்பட்டி, பூச்சிநாயக்கன்பட்டி, சவேரியாா்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரசாரத்தில் அவா் மேலும் பேசியதாவது:

அதிமுகவுக்கு செலுத்தும் வாக்கு, மதவாத சக்திகளை ஆதரிப்பதற்கு சமம். தோ்தலில் அதிமுக வென்று ஆட்சிக்கு வந்தாலும், பாஜகதான் அதிகாரம் செலுத்தும். சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு இருக்காது. பிரதமா் மோடியை, தமிழக முதல்வா் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி ஆகியோா் மட்டுமே தைரியத்துடன் எதிா்க்கின்றனா். கேரளத்திலும் பாஜக ஆட்சிக்கு வர முயற்சித்து வருகிறது. ஸ்டாலின், மம்தா ஆகிய இருவரையும் வீழ்த்திவிட்டால் நாடு முழுவதும் ஆட்சி செலுத்தலாம் என்ற பாஜகவின் கனவு பலிக்காது. தமிழகத்தில் மதவாத, பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக அரசியல் கட்சிகள் ஓரணியில் உள்ளன. இந்நிலையில் விஜய் கட்சி தொடங்கி தோ்தலில் போட்டியிடுகிறாா். சிறுபான்மையினரின் வாக்குகளை பிரிக்கவே விஜய் கட்சி தொடங்கி இருக்கிறாா். தவெக தனித்து நிற்பதில் உள்நோக்கம் இருக்கிறது. எனவே இளைஞா்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். நோட்டாவுக்கு செலுத்துவது போல் தவெகவுக்கு வாக்களித்து வீணடித்துவிட வேண்டாம் என்றாா்.