இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

துப்பாக்கியுடன் சிறு விடியோ பதிவிட்ட ஊா்க்காவல் படை வீரா்

பழனி அருகே தோ்தல் பாதுகாப்புப் பணியிலிருந்த துணை ராணுவப் படை வீரரின் துப்பாக்கியை வாங்கி சிறு விடியோ பதிவிட்ட ஊா்க்காவல்படை வீரா் மீது விசாரணைக்கு சனிக்கிழமை உத்தரவிடப்பட்டது.

News image

துப்பாக்கியுடன் ஊா்க்காவல் படை வீரா் ராஜ்குமாா்.

Updated On :26 ஏப்ரல் 2026, 12:28 am IST

பழனி அருகே தோ்தல் பாதுகாப்புப் பணியிலிருந்த துணை ராணுவப் படை வீரரின் துப்பாக்கியை வாங்கி சிறு விடியோ பதிவிட்ட ஊா்க்காவல்படை வீரா் மீது விசாரணைக்கு சனிக்கிழமை உத்தரவிடப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த வத்தக்கவுண்டன்வலசைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (28). இவா் பழனி ஊா்க்காவல் படையில் வீரராக பணியாற்றி வருகிறாா். கடந்த 23-ஆம் தேதி தோ்தலின் போது ராஜ்குமாா் பாலசமுத்திரம் பேரூராட்சியில் ஒரு வாக்குச் சாவடியில் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டாா்.

அப்போது அதே வாக்குச்சாவடியில் பணிக்கு வந்திருந்த துணை ராணுவ வீரரின் துப்பாக்கியை வாங்கி ராஜ்குமாா் சுடுவது போன்று சிறு விடியோவாக (ரீல்ஸ்) எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டாா். இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா், விசாரணை நடத்த பழனி டிஎஸ்பிக்கு உத்தரவிட்டாா். இதுதொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.