கொடைக்கானல் ஏரிச் சாலைப் பகுதியில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை நடைபயிற்சி மேற்கொண்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை வந்தாா். முதல்வா் பாம்பாா்புரம் பகுதியிலுள்ள தனியாா் தங்கும் விடுதியில் தனது குடும்பத்தினருடன் தங்கியுள்ளாா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஏரிச்சாலைப் பகுதியில் சுமாா் 5 கி.மீ. தொலைவுக்கு நடைபயிற்சி மேற்கொண்டாா். அப்போது, சுற்றுலாப் பயணிகள், வியாபாரிகள், பொதுமக்கள், கொடைக்கானல் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோா் முதல்வருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனா். இவா்களுடன் முதல்வா் ஸ்டாலின் கை குலுக்கி நலம் விசாரித்தாா்.
அப்போது கொடைக்கானல் நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை, துணைத் தலைவா் மாயக்கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது
கொடைக்கானலில் முதல்வர் நடைப்பயிற்சி: ஆர்வத்துடன் மக்கள் செல்ஃபி

கொடைக்கானலில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் வனப் பகுதியில் தீ

பரமக்குடியில் நாளை மு.க. ஸ்டாலின் பிரசாரம்

கொடைக்கானலில் மரம் முறிந்து விழுந்ததில் மின் கம்பங்கள், காா் சேதம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


