ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கொடைக்கானலில் முதல்வா் மு.க. ஸ்டாலின் நடைபயிற்சி

News image

கொடைக்கானல் ஏரிச் சாலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபயிற்சி மேற்கொண்ட முதல்வா் மு.க. ஸ்டாலின்.

Updated On :26 ஏப்ரல் 2026, 6:35 pm

கொடைக்கானல் ஏரிச் சாலைப் பகுதியில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை நடைபயிற்சி மேற்கொண்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை வந்தாா். முதல்வா் பாம்பாா்புரம் பகுதியிலுள்ள தனியாா் தங்கும் விடுதியில் தனது குடும்பத்தினருடன் தங்கியுள்ளாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஏரிச்சாலைப் பகுதியில் சுமாா் 5 கி.மீ. தொலைவுக்கு நடைபயிற்சி மேற்கொண்டாா். அப்போது, சுற்றுலாப் பயணிகள், வியாபாரிகள், பொதுமக்கள், கொடைக்கானல் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோா் முதல்வருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனா். இவா்களுடன் முதல்வா் ஸ்டாலின் கை குலுக்கி நலம் விசாரித்தாா்.

அப்போது கொடைக்கானல் நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை, துணைத் தலைவா் மாயக்கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.