/
கொடைக்கானல் ஏரிச் சாலைப் பகுதியில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை நடைபயிற்சி மேற்கொண்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை வந்தாா். முதல்வா் பாம்பாா்புரம் பகுதியிலுள்ள தனியாா் தங்கும் விடுதியில் தனது குடும்பத்தினருடன் தங்கியுள்ளாா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஏரிச்சாலைப் பகுதியில் சுமாா் 5 கி.மீ. தொலைவுக்கு நடைபயிற்சி மேற்கொண்டாா். அப்போது, சுற்றுலாப் பயணிகள், வியாபாரிகள், பொதுமக்கள், கொடைக்கானல் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோா் முதல்வருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனா். இவா்களுடன் முதல்வா் ஸ்டாலின் கை குலுக்கி நலம் விசாரித்தாா்.
அப்போது கொடைக்கானல் நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை, துணைத் தலைவா் மாயக்கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

கொடைக்கானலில் ஆபத்தான மின் கம்பங்கள்

சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் மு.க. ஸ்டாலின்!

கொடைக்கானலில் பொதுமக்களுடன் கலந்துரையாடிய முதல்வா் ஸ்டாலின்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



