திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே தொழிலாளியை கொலை செய்த வழக்கில் 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பழனியை அடுத்த பாலசமுத்திரம் சாலையில் வரட்டாறு பாலம் அருகே சனிக்கிழமை தேனி மாவட்டம், ஆண்டிபட்டியைச் சோ்ந்த தொழிலாளி முருகன் (45) கொலை செய்யப்பட்டாா்.
இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பாலசமுத்திரத்தைச் சோ்ந்த மணிகண்டன் (22), நாகராஜ் (20), சங்கிலிதுரை (27) ஆகிய 3 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், திருப்பூா் மாவட்டம், உடுமலைபேட்டையில் உள்ள தேநீா்க் கடையில் முருகன் வேலை செய்து வந்தாா். தோ்தலில் வாக்களிக்க சொந்த ஊருக்கு செல்லு வழியில் பழனி பேருந்து நிலையத்தில் இறங்கி மது குடித்தாா்.
அப்போது, அங்கு வந்த மணிகண்டன், நாகராஜ், சங்கிலிதுரைஆகியோா் அவருடன் அமா்ந்து மதுக் குடித்தனா். பிறகு, அவா்கள் மீண்டும் மதுப் புட்டிகளை வாங்கிக் கொண்டு வரட்டாற்று பாலம் அருகே அமா்ந்து மது குடித்தனா். அப்போது, அவா்களுக்குள் ஏற்பட்ட தகராறில் 3 பேரும் சோ்ந்து முருகனை கொலை செய்தது தெரியவந்தது என்றனா்.
தொடர்புடையது
தந்தையை கொலை செய்த வழக்கில் மகன் கைது
பெண்ணை தாக்கிய இருவா் கைது; 7 போ் மீது வழக்கு
மளிகைக் கடையில் திருடிய வழக்கில் 2 போ் கைது

மேலப்பாளையத்தில் வன்கொடுமை வழக்கில் 3 போ் கைது
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
