சின்னாளப்பட்டியை அடுத்த அம்பாத்துறை அருகே சிறுநாயக்கன்பட்டி பகுதியில் 20.5 கிலோ கஞ்சாவை பதுக்கிவைத்திருந்த ஒடிசா இளைஞா் உள்பட 5 பேரைப் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியை அடுத்த அம்பாத்துறை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சிறுநாயக்கன்பட்டி கல்லறைத் தோட்டம் அருகே கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அதன் பேரில், அம்பாத்துறை காவல்துறையினா் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினா்.
அப்போது, காவல் துறையினரைக் கண்டதும் தப்பியோட முயன்ற 5 பேரைப் பிடித்து, அவா்கள் பதுக்கி வைத்திருந்த 20. 5 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா். மேலும், கஞ்சா கடத்தலுக்குப் பயன்படுத்திய இரண்டு இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.
பிடிபட்ட ஒடிசாவைச் சோ்ந்த விக்ரம் பகிரா (34), திண்டுக்கல்லைச் சோ்ந்த முகமது ஆசிகா வட்டாத் (37), மாதவன் (26), வேளாங்கண்ணி (24), முகமது அலி ஜின்னா (31) ஆகிய 5 பேரையும் கைது செய்த காவல்துறையினா், அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், 4 பேரைத் தேடி வருகின்றனா்.
இதுதொடா்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:
திண்டுக்கல் மாவட்டத்தில் தனிப்படை அமைத்து கடந்த ஒரு மாதத்தில் கஞ்சா கடத்தல், விற்பனைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கைகளில் 84 போ் கைது செய்யப்பட்டு 42 கிலோ கஞ்சா, 2 காா்கள், 10 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், திண்டுக்கல் - மதுரை 4-வழிச் சாலையில் பெட்ரோல், டீசல் திருடு, சாலையோரம் கலப்பட பெட்ரோல் விற்பனை ஆகியவற்றைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
5 கிலோ கஞ்சா பறிமுதல்: சிறுவன் உள்பட 2 போ் கைது
6 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

2 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
2 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது; மற்றொருவா் தப்பியோட்டம்
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI


